LightBlog

Tuesday, 1 August 2017

கொளத்தூர் மணிக்கு எதிர்ப்பு : மதுரையில் பதற்றம்



கொளத்தூர் மணி சேலத்தில் ஒரு கருத்தரங்கில் பேசிய காணொளி கடந்த சிலகாலமாக சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவியது , அதில் சுதந்திர போராட்ட வீரர் பசும்பொன் உ.முத்துராமலிங்கத்தேவரை பற்றி தவறாக பேசியுள்ளார்.

அதனை கண்டித்து பல  வகையில் தமிழக முழுவதும்  கொளத்தூர் மணிக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இன்று ஒரு  நிகழ்ச்சிக்காக கொளத்தூர் மணி மதுரை வருவதாக இருந்தது அதனை அறிந்து தென்னிந்திய பார்வர்டு பிளாக், பசும்பொன் தேசிய கழகத்தினர் காளவாசல் பகுதியில் மறியலில் ஈடுபட்ட்டனர் உடனே காவல்துறையினர் சென்று மறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்து அங்குள்ள திருமண மண்டபத்தில் அடைத்து வைத்துள்ளனர், கொளத்தூர் மணியை திண்டுக்கல் மாவட்டம்  கொடைரோடு அருகில் போலீசார் தடுத்து நிறுத்தினர்.

கொளத்தூர் மணிக்கு ஆதரவாக தலித் அமைப்பான விடுதலை சிறுத்தை கட்சியினர் மதுரையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் மதுரையில் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது.

No comments:

Post a Comment

Adbox