LightBlog

Saturday, 19 August 2017

22-ம் தேதி வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்

பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குதலைக் கண்டித்து 22-ம் தேதி ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். 10 லட்சம் வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்பார்கள் என வங்கி ஊழியர் சங்கப் பொதுச்செயலாளர் வெங்கடாசலம் சென்னையில் பேட்டியளித்துள்ளார். ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் கோடி வங்கிக் கடன் வசூலிக்கப்படாமல் உள்ளது என வெங்கடாசலம் தாகவல் தெரிவித்துள்ளார். ரூயா என்ற தொழிலதிபர் ரூ.44 ஆயிரம் கோடி வங்கிக் கடன் வாங்கியுள்ளார்.

குறைந்தபட்சம் வங்கியில் இருப்பு ரூ.5 ஆயிரம் வைக்கவேண்டும் என்ற நிபந்தனை தவறு என்று இவர் கூறியுள்ளார். அதிருப்தி அதிகமானால் நாட்டில் போராட்டம் அதிகரிக்கும். மேலும் அரசு வங்கி ஊரியர்கள் பல மடங்கு அதிகமாக வேலை செய்கின்றனர் என வங்கி ஊழியர் சங்கப் பொதுச்செயலாளர் வெங்கடாசலம் பேட்டியளித்துள்ளார்.

No comments:

Post a Comment

Adbox