
ஓலா உபேர் போன்ற நிறுவனங்களில் சொந்த வாகனம் வைத்திருப்பவர்கள் கூட ரத்தம் உரிய வேலை வாங்கப்படுகின்றனர், வாகன ஓட்டிகள் சம்பாதிப்பதை விட அந்த நிறுவனங்களே அதிகம் சம்பாதிக்கின்றது.
வாகன ஓட்டிகளிடம் கமிஷனாகவும் வாடிக்கையாளர்களிடம் அபராத தொகையாகவும் அதிகமா இந்த நிறுவனங்கள் வசூலிக்கின்றனர். சில மாதங்களுக்கு முன்பு கூடவாகன ஓட்டிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர் அப்போதும் கூட அசராமல் தங்கள் வேலையை செய்துகொண்டு தான் இருந்தன இரு நிறுவனங்களும்.
இதனை தொடர்ந்து வாகன ஓட்டிகள் அனைவரும் இணைந்து புதிய செயலியை உருவாக்க திட்டமிட்டுள்ளர்னர் அதற்க்கு ஓட்டுநர் தோழர்கள் சங்கம் என்று பெயரிட்டுள்ளனர்.
இச்செயலி மார்ச் மாதம் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment