LightBlog

Friday, 4 August 2017

தொழிலாளர் நலனில் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர்!!

1938, 1939 ஆம் ஆண்டுகளில் பசும்பொன் தேவரின் கவனம் தொழிலாளர் வர்க்கத்தின் மீது பதிந்தது. பசுமலை மகாலக்ஷ்மி மில் தொழிலாளர் சங்கம், நிட்டிங் கம்பனி தொழிலாளர் சங்கம் ஆகியவை தோற்று விக்கப்பட்டுப் பசும்பொன் தேவர் தொழிற்ச்சங்கத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மகாலக்ஷ்மி மில் நிர்வாகம் தொழிலாளர்கள் கோரிக்கைகளை ஏற்க மறுத்தது.

அதனால் வேலை நிறுத்தம் தொடங்கியது. மதுரை நகர் தொழிலாளர் இயக்க வரலாற்றில் முதல் வேலை நிறுத்தம் இதுதான். தேவரின் தொழிலாள வர்க்கப் போராட்டங்களில் தோழர் ஜீவானந்தமும் இணைந்து பணியாற்றினார்.

1938 அக்டோபர் 15ஆம் நாள் தொழிற்சங்கத் தலைவர் பசும்பொன் தேவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். போராட்ட  இறுதியில் பசுமலை மகாலக்ஷ்மி மில் நிர்வாகம் பணிந்தது. இந்த மில் தொழிலாளர்களின் வெற்றி, நிட்டிங் கம்பனி தொழிலாளர்களையும் போராட்டத்தில் குதிக்க வைத்தது.

இங்கும் பசும்பொன் தேவரவர்கள் தலைமையில் தொழிலாளர்கள் உறுதியாகப் போராடினார். இறுதியில் வெற்றி தொழிலாளர்களை தேடி வந்தது.

மதுரையை மையமாக கொண்டு தொழிற்ச்சங்கப் பணியாற்றினார் பசும்பொன் தேவர்...

No comments:

Post a Comment

Adbox